கோவை மாவட்டம் மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்காவது இடத்தைப் பிடித்ததை தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்று வெளியான தேர்வு முடிவுகளால் உற்சாகமடைந்த மாணவ மாணவிகள், பெற்றோர்களுடன் தங்களுக்கு விருப்பமான கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்காக தனியார் கல்லூரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/08/UGEVjQl74XuQPAg8jE8F.jpeg)
/indian-express-tamil/media/media_files/2025/05/08/5JR1FIeT4Af3VSJWhMTa.jpeg)
தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்ற சிறந்த பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் தீவிரமாக உள்ளனர். அதேசமயம், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், எதிர்காலத்தில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் பாடப்பிரிவுகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்