/indian-express-tamil/media/media_files/2025/09/28/kovai-2025-09-28-14-17-57.jpg)
கோவை வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து... புகை மண்டலம் சூழ்ந்ததால் பரபரப்பு!
கோவை, மாநகரின் முக்கிய மையப் பகுதியான டவுன்ஹாலில் ஏராளமான ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. நாள்தோறும் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அப்பகுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வரத் துவங்கியுள்ளனர். மேலும் இன்று (செப் ) விடுமுறை தினம் என்பதால் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், ஒப்பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகத்தில் சிம்கோ என்ற கடையின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்தான காரணம் இதுவரை தெரியவில்லை.
மேலும் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த விசாரணையில் தீ விபத்திற்கான காரணம் தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவில் வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.