Advertisment

கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு- லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர்

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இக்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இக்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

Advertisment

அப்போது ஒரு தொழிலாளி காலுக்கு அடியில் பாம்பு புகுந்து சென்று இருக்கிறது.

பதற்றம் அடைந்த தொழிலாளி, பாம்பைப் பார்த்து திகைத்து நின்றிருக்கின்றார்.

பின்னர் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அமீன், அறைக்குள் வந்தது கண்ணாடிவிரியன் பாம்பு என்பதனை தெரிந்து கொண்டார்.

உடனடியாக அந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு பாதுகாப்பாக பிடித்து, கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டு  அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

கொடிய விஷம் உடைய பாம்புகளை  பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறை, பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்து அதனை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனவும், பாம்புகளை அடிக்கவோ அதனை பிடிக்கவோ கூடாது எனவும் பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமின் கூறினார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment