Advertisment

மொபைல் மோசடி,  24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் இன்னொரு வங்கிக்கு பணம் செல்வதை தடுக்க முடியும்: டிஜிபி

வெளிநாட்டு சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிப்பது சவால் ஆனது, எனவே மக்கள் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

டி.ஜி.பி. சைலேந்திர பாபு

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

Advertisment

பிறகி போத்தனூரில் உள்ள கோவை மாநகர காவல் துறையின் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் உள்ளன. மகளிர் காவல் நிலையங்கள் 202 மட்டுமே இருந்தது.

ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் ஒரு மகளிர் காவல் நிலையம் முதலமைச்சர் அனுமதி அளித்தார்‌. அதன்படி 1574 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது.

போத்தனூர் பகுதியில் மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

போத்தனூர் பகுதியில் உள்ள பெண்கள் குறைகள் மற்றும் அநீதிகளை முறையீடு செய்யலாம். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

புகார் கொடுக்கும் பெண்கள் சிட்டிக்கு செல்ல வேண்டியதில்லை.

கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை மாநகர காவல் துறையை வலு சேர்க்கவும், விரிவாக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

கோவையில் 3 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது .

சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் பகுதிகளில் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. வடவள்ளி, துடியலூர் காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையில் இணைக்கப்படும். மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்கள் 20 காவல் நிலையங்களாக அதிகரிக்கப்படும். இதனால் காலப்போக்கில் மாநகரில் குற்றங்கள் குறையும்.

இணைய வழி குற்றங்கள் பொருத்தவரை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் . மக்கள் எளிதில் ஏமாறுவது சைபர் கிரைமில் தான்.

மொபைல் போன் உள்ளவர்கள் இந்தியாவில் வேறு மாநிலங்களில் இருந்தும், இந்தியாவிற்கு வெளியே இருந்தும் ஏமாற்றலாம்.  அதிக வட்டி தருவதாக முதலீடு செய்ய வைத்து மொத்தமாக ஏமாற்றும் நபர்கள் அதிகரித்துள்ளனர்.

பணம் ஏமாந்த நபர்கள்  24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால்,  இன்னொரு வங்கிக்கு பணம் செல்வதை தடுக்க முடியும் .

அமெரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில் மோசடி கும்பல்கள் உள்ளன.‌ அவர்களை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி தேவை.

வெளிநாட்டு குற்றவாளிகளை பிடிப்பது சவாலானது.

எனவே வரும் முன் காப்பதே சிறந்தது எல்லா மாநகரிலும் சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது. காவல் உதவி என்ற ஆஃப் பயனுள்ள ஆஃப்பாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்கு பல வசதிகள் உள்ளது. ஆனால் இந்த ஆப்பை பல மக்கள் பதிவிறக்கம் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளின் போது கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment