/tamil-ie/media/media_files/uploads/2023/07/uio1.jpg)
ஆளுநர், இ.பி.எஸ் இரங்கல்
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலையின் உண்மை பின்னணியை தெரிந்துகொள்ள சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று அரசை வலியுறுத்துவதாக இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டி.ஐ.ஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்த, விஜயகுமார், இன்று காலையில் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இழப்பு முக்கிய இழப்பாக கருத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ புத்தி கூர்மை மிக்க போலீஸ் அதிகாரி விஜயகுமாரின் மறைவு வேதனை அளிக்கிறது. விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ” கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது,
ஆகவே திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.