பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 4 லட்சத்து 55 ஆயிரத்து 592 வாக்களர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 30 இலட்சத்து 49 ஆயிரத்து 4 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 96 ஆயிரத்து 770 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 51 ஆயிரத்து 665 பேரும் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தங்கள் வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“