/indian-express-tamil/media/media_files/hm45H2U51CyhPEB7amb1.jpg)
தி.மு.க நிர்வாகி பாக்யராஜ் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Coimbatore | Lok Sabha Election 2024 | Dmk: கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பி.என்.புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர்.
இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் அங்கு இருந்த உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும் - தி.மு.க பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, உதவி கமிஷனர் நவீன் குமார் தி.மு.க பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவையில் பூத் சிலிப் வழங்க எதிர்ப்பு: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் - வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #DMK | #Coimbatore | #Police | #LokSabhaElections2024 | @rahman14331pic.twitter.com/r2RTdoEwjr
— Indian Express Tamil (@IeTamil) April 19, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.