/indian-express-tamil/media/media_files/ysk2hKdsW0B5End1kmWi.jpg)
இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று இன்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வெற்றி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 66-வது வார்டில் புலியகுளத்தில் உள்ள பெரிய விநாயகரை தரிசனம் செய்தும், தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
புலியகுளம் தேவாலயம், ஏரிமேடு அம்மன் குளம், 64-வது வார்டு பெரியார் நகர், 63-வது வார்டு 80 அடி சாலை, ஒலம்பஸ், பெருமாள் கோவில் மைதானம், திருவள்ளுவர் நகர், டிரினிட்டி சர்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
புனித வெள்ளியையொட்டி தேவாலயத்திற்கு வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற வேட்பாளர் வீடு வீடாக சென்று, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, திமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறினார். இந்த வாக்குசேகரிப்பின் போது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக பகுதிக்கழக செயலாளர்கள் பசுபதி, நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.