பா.ஜ.க-வுடன் சவாலில் ஜெயித்த தி.மு.க: கோவையில் சொன்னபடி மட்டன் பிரியாணி விருந்து

கோவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.க பா.ஜ.க இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என அறிவித்தனர்.

கோவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.க பா.ஜ.க இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என அறிவித்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore DMK executive provided Mutton biryani for win over against BJP lok sabha constituency 2024  results Tamil News

கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

Advertisment

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 20-வது தொகுதியான கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சுவாரசியமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 71.7% வாக்குகள் பதிவாகின.

இந்த தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்முறை  தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றது.  

இந்நிலையில், கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார். இதனையொட்டி, தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 

Advertisment
Advertisements

 

இதனிடையே, தி.மு.க முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர தி.மு.க துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார். குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.க பா.ஜ.க இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற  https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: