Advertisment

போக்கு காட்டும் ஒன்றை காட்டு யானை; இரவில் வாகனங்களை முட்டித் தள்ளி அட்டகாசம்

கோவையில் தொண்டாமுத்தூர், புதுப்பாளையம் பகுதியில் இரவில் ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வாகனங்களை சேதப்படுத்தியும், அரிசி, பருப்பு மூட்டைகளை சேதப்படுத்தியும் வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ele vehi.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், புதுப்பாளையம், தாளியூர் போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் ஒற்றைக் காட்டு யானை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Advertisment

கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.  மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருக்கிற இருசக்கர மற்றும் நான்கு வாகனங்களை "நான் போற பாதையில ஏன் நிறுத்தி வைத்து உள்ளீர்கள் என்பது போன்று தள்ளிவிட்டு செல்கின்றது."  மேலும் வீடுகளில் உள்ள மேற்கூரைகளை பிரித்து மேய்ந்து விடுகிறது.  

அங்கிருந்து அரிசி, பருப்பு மூட்டைகளை தின்றுவிட்டு வீசி செல்கிறது. இதனால் அச்சத்தில் இருக்கின்ற அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 

அவர்களிடம் போக்கு காட்டிக் கொண்டு அவர்களை ஏமாற்றி அருகில் இருக்கின்ற மலைப் பகுதியில்  பதுங்கி கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதனால் உயிருக்கு பயந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருந்து விடுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment