/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-2023-01-21T152736.140.jpg)
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதில் உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவரின் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்திற்கு இன்று அதிகாலை 5 குட்டிகள் உட்பட 12 யானைகள் புகுந்தது.
தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் இரண்டு ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. மேலும் அத்தோட்டத்தில் தக்காளி பயிருக்கு போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியது. இதனையடுத்து அதே பகுதியில் நாகர்பீடம் அறக்கட்டளையின் சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் பிள்ளை மேய்ந்து விட்டு சென்றது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.