/indian-express-tamil/media/media_files/uhKrMtim32msnnuj6VdL.jpeg)
Coimbatore
கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தேசிய கண் தான விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பார்வை திறன் இன்மை மிக முக்கிய பிரச்னையாக உள்ளது.
இந்நிலையில் கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்தில் கோவை பி.பி.ஜி ஆப்தோமெட்ரி கல்லூரி மற்றும் வட கோவை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மனித சங்கிலி நடத்தினர்.
இதில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மனித சங்கிலியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் சந்தீஷ் கூறியதாவது, கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் கண் தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இது போன்ற நிகழ்ச்சிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கல்லூரி முதல்வர் ஜெசிந்தா, கண்களை தானம் செய்வதால்பார்வையற்ற பலரின் வாழ்வில் ஓளியேற்ற முடியும் என்ற நோக்கத்தில்இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெயஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்..
மனித சங்கிலியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உங்கள் கண்கள் வேறோருவரின் உலகமாக அமையட்டும், கடவுளின் பரிசை ஏன் அழிக்க வேண்டும் போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அணிவகுத்து நின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.