/indian-express-tamil/media/media_files/gqi0Fsl40bVSjNUhDDQR.jpg)
கைது செய்த விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore | farmer-protest: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக அப்பகுதியில் உள்ள 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழக முழுவதும் விவசாயிகளை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போரட்டக் குழுவினர் தமிழக அரசை கண்டித்து அச்சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் தங்கராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும், கைது செய்த விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.