/indian-express-tamil/media/media_files/kmxRKPu9znfrU6j8jmCQ.jpg)
Coimbatore
கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கணுவாய்- பன்னிமடை சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவைமேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Video: கோவை மாவட்டம் கணுவாய் பன்னிமடை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்#Coimbatorepic.twitter.com/lXW829yqq8
— Indian Express Tamil (@IeTamil) November 23, 2023
இவ்வழியாக பொது பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் தனிநபர் வாகனங்களில் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மழைநீர் வெள்ளம் போல் செல்வதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் வேறு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வழியாக செல்லும் மழை நீரே சின்னவேடம்பட்டியை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.