நுழைவு கட்டணத்தில் மோசடி : கோவை குற்றாலத்தில் வனவர் பணியிடை நீக்கம்

கோவையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

கோவையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

author-image
WebDesk
New Update
நுழைவு கட்டணத்தில் மோசடி : கோவை குற்றாலத்தில் வனவர் பணியிடை நீக்கம்

கோவை குற்றாலத்தில் நுழைவு கட்டணத்தில் மோசடி செய்த வனவர் ராஜேஷ் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் 35"லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கோவையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.  குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் அளவிற்கு அதிகமான மக்கள் வந்து செல்வது வழக்கம்.  இங்கு சுற்றுலா பயணிகளுக்கு  நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு 20 ரூபாய், கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோவை குற்றாலத்தில் போலி ரசீது வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்திருந்தார். 

publive-image
Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது கோவை குற்றால நுழைவு கட்டண மோசடியில் போளுவாம்பட்டி வனவர் ராஜேஷ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இது குறித்து முன்னாள் வனச்சரகர் சரவணனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: