/indian-express-tamil/media/media_files/Q8oeOufPSjrrZlPFlVSY.jpg)
கோவை முன்னாள் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தற்கொலை
Coimbotore | Dmk:தி.மு.க-வின் கோவை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் (வயது 65) காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார். அவரை மீட்டு தனியார் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணன் தற்கொலை குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார். இவரது கட்சி பதவி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.