கோவையில் அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் படுகாயம்

கோவையில் அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கோவையில் அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bus Accident in coimbatore

Bus Accident in coimbatore

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. முருகவேல் என்ற ஓட்டுநர் இப்பேருந்தை ஓட்டி வந்து உள்ளார்.

Advertisment

இந்நிலையில் வேடப்பட்டி அருகே எதிர் திசையில் மாதம்பட்டி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டு இருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தின் போது அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீதும் பேருந்து மோதியதில் அவர் காயம் அடைந்தார்.

இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிசங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கோபி சங்கர் மற்றும் பழ வியாபாரி சுப்பிரமணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment
Advertisements

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: