/indian-express-tamil/media/media_files/aaacmQwwd2DqehBvgu6R.jpg)
Coimbatore
கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு அங்கிருந்த ஒரு இளைஞர் அரைகுறை ஆடையுடன் சைகை காட்டியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவர், சக நண்பர்களுக்கு சொல்லும் முன்பு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பெண் மருத்துவரிடம் அத்துமீறி அங்கு சுற்றித் திரிந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த மயங்க் டல்லார் (25) என்ற இளைஞரை பந்தய சாலை போலீசார் கைது செய்தனர். அவன்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோவையில் அதேபோல் பெண் பயிற்சி மருத்துவரிடம் வடமாநில இளைஞர் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.