scorecardresearch

கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

கோவை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வெளியேறும் வழி மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள கடும் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.

Coimbatore Govt hospital drainage leak, patients suffering, action needed Tamil News
Coimbatore Government Hospital drainage leak: Will the district administration take action? Tamil News

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில், நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் எதிர்பாராத விதமாக கழிவு நீர் பெருமளவில் வெளியேறியுள்ளது. மருத்துவமனையில் உள்ள பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் வெளியே செல்லும் வழி மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள துர் நாற்றத்தால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வந்த பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இதேபோல கடந்த மாதம் கோவை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. இதனால் அங்குள்ள நோயாளிகள், மக்கள், செவிலியர் மற்றும் இதர நபர்கள் பெரும் சிரமத்துக்குள் ஆகி இருந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதற்கு உடனையாக தீர்வு காண வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore govt hospital drainage leak patients suffering action needed tamil news

Best of Express