3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: கோவைக்கு விரைந்தது மாநில பேரிடர் மீட்புப் படை

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக லைஃப் ஜாக்கெட், கடப்பாரை, ரம்பம், கயிறு, கோடாரி, ஒலிபெருக்கி, காடா விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக லைஃப் ஜாக்கெட், கடப்பாரை, ரம்பம், கயிறு, கோடாரி, ஒலிபெருக்கி, காடா விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cbe rescue team

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கோவை மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்டை சென்னை வானிலை ஆய்வு மையம்  விடுத்துள்ள நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெற்பாடு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Advertisment

மழை வெள்ளத்தின் போது பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக லைஃப் ஜாக்கெட், கடப்பாரை, ரம்பம், கயிறு, கோடாரி, ஒலிபெருக்கி, காடா விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.

Advertisment
Advertisements

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், அதனை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் தயார் படுத்தி வைத்துள்ளனர். வெள்ள பாதிப்பு ஏதேனும் ஏற்படும் பட்ட்சத்தில், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: