கோவை ஆர்.எஸ் புரம் வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணி அளவில் 4 பேர் காரில் ஓட்டலுக்கு வந்து உள்ளனர். பின்னர் பிரியாணி ஆர்டர் செய்தனர். சப்ளையர் அவர்கள் கேட்ட பிரியாணியை இலையில் பரிமாறினார்.
சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவர் பிரியாணியில் ஊற்றிய சிக்கன் குழம்பில் பல்லி இறந்து கிடப்பதாக ஒரு கேள்வி எழுப்பினார். இதை பார்த்த ஹோட்டல் மேனேஜர் சுப்பிரமணியம் உடனே அங்கு சென்று பார்த்தார். அப்போது அவர்களில் ஒருவர் வெளியே சென்று வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார்.
பிரியாணியில் பல்லி கிடந்ததாக கூறிய நபர்கள் அங்கு இருந்து காரில் புறப்பட்டு சென்று விட்டனர். இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நேரில் வந்து விசாரித்தார். ஹோட்டல் உரிமையாளர் உமாபதி ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதே நேரத்தில் சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டதாக ஒருவர் தகவல் கொடுத்ததாக ஹோட்டல் உரிமையாளருக்கு கூறி உள்ளார். 3 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு நடராஜன் என்பவர் 1:20 மணிக்கே பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் நடராஜன் தெரிவித்ததாகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் உரிமையாளர் உமாபதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது, நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.