பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கும் குவாரி ஓனர்கள்: ஐகோர்ட் நீதிபதி வேதனை

கோயம்புத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
சென்னை உயர் நீதிமன்றம்

கோயம்புத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட ஒரு குவாரிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். "சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

"விசாரணையின்போது குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், "கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை யார் யாருக்கு இதில் என்னென்ன பங்கு உள்ளது என லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

"தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்" என்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார். 

"பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது; ஆனால் இவ்வழக்கில் சுற்றுச்சூழல் துறை ஆணையின் செயல் அதிர்ச்சியளிக்கிறது".

Advertisment
Advertisements

"சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும்" என்றும்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: