Advertisment

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை- குற்றவாளியின் தந்தை தற்கொலை

இந்த வழக்கில் விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Jos allukas

Coimbatore

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடித்த விஜய்யின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கோவையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளை போனது. 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் விஜய் மனைவி நர்மதா  கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. விஜய்யின் மாமியார் யோகராணி என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 1.35 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டது.

இன்னும் 300 கிராம் முதல் 400 கிராம்  நகைகள் மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளது.

3 நாட்களில் கொள்ளையனை பிடித்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விஜய்யின் தந்தை முனிரத்தினத்தை கோவை போலீசார் விசாரித்து விட்டு திரும்பினர். இந்த நிலையில் முனிரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment