கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: குற்றவாளி தர்மபுரி காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு- மாநகர காவல் ஆணையர் பேட்டி

நிவாரண பொருட்களை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

நிவாரண பொருட்களை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

author-image
WebDesk
New Update
coimbatore

Coimbatore

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய், தர்மபுரி மாவட்ட காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisment

கோவை மாநகர காவல்துறை சார்பிலும், பொதுமக்கள் வழங்கிய பொருட்களும் சேர்த்து 5.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் காவல்துறை வாகனத்தில் இன்று சென்னை அனுப்பபட்டது.

ரூ.2 லட்சம் மதிப்புள்ள உடைகளும், ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களும், ரூ. 79 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களும், 61 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களும் மொத்தமாக ரூ 5 லட்சத்து 74  ஆயிரம்  மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் இதில் அனுப்பப்பட்டன.

Coimbatore

Advertisment
Advertisements

நிவாரண பொருட்களை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன்     சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளி பிடிப்படாவிட்டாலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் கொள்ளையன் விஜய், காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜய்யின் தந்தை தர்மபுரியில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறை விசாரணையால் அவர் உயிரிழப்பு என்று இதுவரை எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை எனவும்  மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.            

இதனிடையே  தருமபுரி வனப்பகுதியில்  கொள்ளையன் விஜய்யை தனிப்படை போலீசார் நேற்று  சுற்றி வளைத்த போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பியவன், தருமபுரியில் உறவினர் வீட்டிலும் நகையை திருடி விட்டு தப்பியுள்ளார்.

சுமார் 20 சவரன் நகையை திருடிவிட்டு விஜய் தப்பிய நிலையில்  தனிப்படை போலீசார் தொடர்ந்து அவரை  தேடி வருவது குறிப்பிடதக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: