/indian-express-tamil/media/media_files/o7PTJnIYB7Q5XPyC35y5.jpg)
Coimbatore
கோவை ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், தர்மபுரியில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக் கடையில் சுமார் 200 சவரன் வைரம், தங்கம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொள்ளையில் ஈடுபட்ட நபரின் செல்போன் சிக்னல் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆனதாக கண்டறியப்பட்ட நிலையில் நேற்று இரவில் இருந்து தனிப்படையில் ஒரு குழு ஆனைமலையில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மபுரி மாவட்டம் ஆரூர் பகுதியை சேர்ந்தவர் என போலீசருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை குழுவினர் தர்மபுரிக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை, தர்மபுரி, உட்பட கோவையில் சில இடங்களிலும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் பட்சத்தில் கூடிய விரைவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பிடிப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.