/indian-express-tamil/media/media_files/brCOsaIyrQlauwqlzP35.jpg)
குற்றவாளியை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த சுமார் 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, குற்றவாளியை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைவரிசை காட்டிய விஜய் (வயது 26) தருமபுரி அரூரை சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டது. அவரைப் பிடிக்க ஆனைமலையில் விரைந்தது.
ஆனைமலையில் விஜய் நண்பன் சுரேஷ் வீட்டில் இருந்தும், அரூரில் உள்ள விஜய் வீட்டில் இருந்தும் மொத்தமாக 2.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.