கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது கோவை குற்றாலம். மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அவ்வப்போது வனத்துறை தடை விதிக்கிறது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. தற்போது அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து 2 மாதங்களாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“