/indian-express-tamil/media/media_files/2025/10/24/coimbatore-2025-10-24-15-40-43.jpg)
Coimbatore
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எட்டிமடை, நரசிபுரம், பேரூர், தீத்திபாளையம், தடாகம், மருதமலை போன்ற இடங்களில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், எட்டிமடைப் பகுதியில் உள்ள ஜெகநாதர் என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட நாய் நேற்று முதல் காணாமல் போனது. அதைத் தேடியும் கிடைக்காததால், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சி பதிவாகி இருந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/24/tiger-2025-10-24-15-43-28.jpg)
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/24/whatsapp-image-2025-10-24-15-37-56.jpeg)
தோட்டத்திற்குள் புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கவ்விக்கொண்டு சென்றது சிசிடிவி காட்சியில் தெரியவந்தது. இதைப் பார்த்த ஜெகநாதர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
மேலும், அந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/24/whatsapp-image-2025-10-24-15-38-20.jpeg)
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us