Advertisment

தொழில் நெருக்கடி, சாலை வரி உயர்வு: கோவை லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தம்

சாலை வரி, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும், சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று (நவ.9) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Lorry.jpg

தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

Advertisment

தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2.50 லட்சம் எண்ணிக்கையிலான லாரிகள் மட்டும் இயங்குகின்றன. லாரி தொழில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. 

இந்த நிலையில் லாரிகளுக்கு "பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது. அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ளபடி சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவை உக்கடம் லாரி பேட்டையில் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisement

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment