/indian-express-tamil/media/media_files/2025/03/14/33r5JGQRDsqPkayQ2zRS.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 10, 2025 13:13 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி உண்ணாவிரத போராட்டம், ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
-
Aug 10, 2025 12:24 IST
திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளையுடன் மண்டல பூஜை முடிய உள்ள நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
-
Aug 10, 2025 11:17 IST
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 10, 2025 10:56 IST
அன்புமணி படம் இடம்பெறவில்லை
ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்கத்தின் மகளிர் பெருவிழா மாநாட்டு முகப்பு வாயில் பதாகைகளில் அன்புமணியின் படம் இடம் பெறவில்லை
-
Aug 10, 2025 10:22 IST
அந்தோணியார் தேர்பவனி
நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூர் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி கோலாகலமாக நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தில் வண்ண காகிதங்களை பறக்கவிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
-
Aug 10, 2025 09:51 IST
4ம் நாளாக கரடியை பிடிக்கும் பணி தீவிரம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 4 வது நாளாக கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரடியை பிடிக்க கூண்டு வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். தென்காசி புளியங்குடி அருகே வனப்பகுதியில் கரடி கடித்து 3 பெண்கள் காயமடைந்தனர்.
-
Aug 10, 2025 09:15 IST
பதினெட்டாம்படி கருப்பு - சன்னதி திறப்பு
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் இன்று திறந்தன.
-
Aug 10, 2025 09:10 IST
வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியில் வினோத உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. ஆடு வித்யாசமான தோற்றத்தில் இருப்பதால் ஆட்டு குட்டியை வியப்புடன் பார்த்து சென்ற கிராம மக்கள் எதுவும் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.
-
Aug 10, 2025 09:08 IST
மேட்டூர் அனை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9200 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.54 அடியாகவும், நீர் இருப்பு 91.161 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து 14,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.