/indian-express-tamil/media/media_files/sV3i1xWsjTlbUl2WTrjC.jpg)
மாஞ்சோலை மக்களை சந்திக்கும் ஸ்டாலின்:
நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாஞ்சோலை மக்களையும், சுற்றுலா மாளிகையில் மீனவர்களையும் சந்திக்கிறார். மேலும், ரூ. 167 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அவர், 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
Feb 07, 2025 23:43 IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமின்
மணப்பாறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான முதல் குற்றவாளி வசந்தகுமாருக்கு பிப்.21ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் கைதான மாராட்சி, சுதா, செழியன், ஜெயலட்சுமி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
-
Feb 07, 2025 19:20 IST
தமிழ்நாடு அரசுக்கு மினி பேருந்து உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை
கரூரில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் 25 ஆண்டுகளாக மினி பேருந்துகளை இயக்கி வருவோருக்கு உரிமம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மினி பேருந்து உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Feb 07, 2025 18:51 IST
கோவில்பட்டியில் பயங்கர தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிட்கோ வளாகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
-
Feb 07, 2025 18:46 IST
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஊர்மக்களுடன் கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை தலைமையிலான போலீஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
Feb 07, 2025 18:18 IST
கனியாமூர் பள்ளி வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்
கனியாமூர் பள்ளி வழக்கு தொடர்பாக 858 பேர் மீது 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
-
Feb 07, 2025 18:00 IST
வள்ளலார் நினைவு தினம் - குமரியில் இந்த தேதியில் டாஸ்மாக் மூடல்
வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி பிப். 1 1 -ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது.
-
Feb 07, 2025 15:45 IST
மணப்பாறை தனியார் பள்ளியில் பாலியல் தொல்லை: குழந்தைகள் நல அலுவலர் விசாரணை
திருச்சி மாவட்டம், மணப்பாறை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மேலும் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். தனியார் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராகுல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றானர்.
-
Feb 07, 2025 15:40 IST
தி.மு.க நிர்வாகி குழந்தைக்கு ‘செந்தாமரை’ என பெயர் சூட்டிய ஸ்டாலின்
திருநெல்வேலியில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் சென்றபோது, திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டி தி.மு.க பேரூராட்சி செயலாளர் முருகையா பாண்டியன் - சிதம்பர வடிவு தம்பதியின் குழந்தைக்கு செந்தாமரை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
Feb 07, 2025 13:50 IST
ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்
வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இச்சம்பவம் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து, முதல் தகவல் அறிக்கை நகல், விரிவான அறிக்கை ஆகியவற்றை 3 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Feb 07, 2025 13:10 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், தற்போது விடுதலை செய்யப்பட்டனர். எனினும், இரண்டு படகோட்டிகளுக்கு
2 ஆண்டு சிறை தண்டனை என இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. -
Feb 07, 2025 12:49 IST
20,000 லிட்டர் பால் சாலையில்
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலம் நோக்கி பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி, வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டேங்கரில் இருந்த 20,000 லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடி வீணானது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்.
-
Feb 07, 2025 11:54 IST
"மாணவிக்கு பாலியல் தொல்லை - சட்ட ரீதியில் நடவடிக்கை" - திருச்சி ஆட்சியர்
திருச்சி மணப்பாறை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்ட ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
-
Feb 07, 2025 11:32 IST
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் - விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தி, பள்ளியை சூறையாடி பொருட்களை எடுத்துச் சென்றதாக 53 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்காக 45 சிறார்கள், விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Feb 07, 2025 11:11 IST
"தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை"
வெள்ள பாதிப்புக்கு, ரூ.37,907 கோடி நிதி கேட்டோம் ஆனால் ரூ.276 கோடிகள் தான் கொடுத்தனர். பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் பேசியுள்ளார்.
-
Feb 07, 2025 11:08 IST
ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியக பணிகள் முடிந்துவிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“ரூ33 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகள் ஏப்ரல் மாதத்திற்கு முடிந்துவிடும்" என்று திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Feb 07, 2025 11:06 IST
நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“நெல்லையில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அந்த நீரை சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், தாமிரபரணியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுவதோடு, தொழிற்சாலை தேவைகளுக்கு சுத்திகரிப்பு நீரை பயன்படுத்த முடியும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Feb 07, 2025 10:39 IST
வெம்பக்கோட்டை அகழாய்வு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடக்கும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 07, 2025 10:10 IST
ரோஜா கொடுத்து ஸ்டாலினுக்கு வரவேற்பு
நெல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜா பூ கொடுத்து பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு. பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்ற முதல்வர் வரவேற்க நின்றிருந்த மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
-
Feb 07, 2025 09:43 IST
கோவையில் பனி மூட்டம்- வானில் வட்டமிட்ட விமானம்
கோவை சுற்றுப்பகுதிகளில் நிலவிய பனிப்பொழிவால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டது. காலை 8.34 மணிக்கு தரையிறங்க வேண்டிய மும்பை விமானம் அரைமணி நேரம் வட்டமடித்து தரையிறங்கியது.
-
Feb 07, 2025 09:26 IST
இபிஎஸ் கண்டனம்
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Feb 07, 2025 09:25 IST
மாஞ்சோலை மக்களை இன்று சந்திக்கிறார் முதல்வர்
நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாஞ்சோலை மக்களையும் சுற்றுலா மாளிகையில் மீனவர்களையும் சந்திக்க உள்ளார்.
-
Feb 07, 2025 09:16 IST
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து கீழே தள்ளிய ஹேமராஜ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.