/indian-express-tamil/media/media_files/2025/06/18/nia-2025-06-18-20-40-11.jpg)
-
Jun 18, 2025 20:46 IST
தூய்மை பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி
கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையை "மாப்" மூலம் சுத்தம் செய்த நிலையில், தங்கள் குழந்தைகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்த நிலையில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Jun 18, 2025 20:39 IST
ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டல் : கோவையில் இருவர் கைது
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கோவையை சேர்ந்த ஜவஹர் சாதிக், அகமது அலி ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்
-
Jun 18, 2025 18:14 IST
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளருக்கு சிறை தண்டனை
2005-ஆம் ஆண்டு திருச்சி, துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கூடுதல் மின்னழுத்தம் வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கியதாக பொறியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது, ஓய்வுபெற்ற இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதித்து மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Jun 18, 2025 17:47 IST
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை - உணவு பாதுகாப்புத்துறை
ஜூஸ் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த வேண்டும். ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்ட்டுகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது. பிளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
-
Jun 18, 2025 17:27 IST
பரமக்குடி துப்பாக்கிச் சூடு - சாரணை ஒத்திவைப்பு
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் ஆகியும் விசாரணையின் நிலை என்னவென்று தெரியவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக RTI மூலம் அனுப்பிய மனுவையும் சிபிஐ நிராகரித்தது என மனுதாரர் தரப்பில் வாதம். இவ்வழக்கில், சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூலை 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Jun 18, 2025 16:43 IST
பாஜக கவுன்சிலர் பதவி இழப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியின் 14வது வார்டு பாஜக கவுன்சிலர் பதவி இழந்தார். கவுன்சிலர் பொன்னுலிங்கம் வளைகுடா நாட்டில் வேலை செய்து வருவதால், நகராட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் பதவி நீக்கம் செய்யலாம் என்ற நகராட்சி சட்டத்தின்படி அவரை பதவி நீக்கம் செய்து ஆணையர் அறிவித்துள்ளது.
-
Jun 18, 2025 16:42 IST
அதிக பாரம் கொண்ட லாரி நகர முடியாமல் திணறல் - 3 என்ஜின் கொண்டு நகர்த்த முயற்சி
வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 200 டன் எடை கொண்ட 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை 180 டயர்கள் கொண்ட லாரி இழுக்க முடியாததால், 3 தனி எஞ்சின் மூலம் இரும்பு ரோப் கட்டி சாலைக்கு கொண்டு வர முயற்சி. 3 எஞ்சின் மற்றும் கூடுதலாக ஜேசிபி கொண்டும் இழுக்க முயற்சி நடக்கிறது, வாலாஜாபாத் அடுத்த பழவேரி என்ற கிராமத்தில் உள்ள சிலை செதுக்கும் இடத்திற்கு இந்தச்சிலை கொண்டு செல்லப்பட உள்ளது,
-
Jun 18, 2025 16:10 IST
பாதிவழியிலேயே தீப்பற்றி எரிந்த பஸ்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்து, சிவகங்கை ரயில்வே மேம்பாலத்தில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக கீழே இறங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
Jun 18, 2025 15:06 IST
ஈரோட்டில் ரசாயன கழிவுகளை வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு..!!
ஈரோட்டில் ரசாயன கழிவுகளை ஓடையில் வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து சட்டவிரோதமாக கழிவுநீரை ஓடையில் வெளியேற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் செய்த ஆய்வில் ரசாயன கழிவுகள் ஓடையில் வெளியேற்றியது அம்பலமானது. இதனை அடுத்து, ஆலையின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
Jun 18, 2025 13:11 IST
வழக்கறிஞர்களின் பணி புறக்கணிப்பு ஏற்கத்தக்கது அல்ல - ஐகோர்ட் மதுரை அமர்வு
“அற்பமான காரணங்களுக்கு வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது அல்ல; நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களின் உதவி மிக முக்கியமானது - நியாயமற்ற பணி புறக்கணிப்பு தீர்வாகாது. அதிகாரிகளை அணுகி பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்கள் தீர்வு காண வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
-
Jun 18, 2025 12:37 IST
“நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு?” - திருச்சி சிவா
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து தி.மு.க மாணவரணி சார்பில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு? என்று மத்திய பா.ஜ.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
-
Jun 18, 2025 12:15 IST
தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் மகன் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் எஸ்.பி.எஸ் ராஜா அ.தி.மு.க தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
Jun 18, 2025 11:37 IST
மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்.
-
Jun 18, 2025 11:35 IST
வாணியம்பாடி கொள்ளை: திருமலா காவலர் கைது
வாணியம்பாடி நீலிக்கொல்லையில் தோல் தொழிற்சாலை தொழிலதிபரின் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவத்தில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட ஆந்திர மாநிலம் திருமலா காவலர் அருண்குமார் கைது
-
Jun 18, 2025 09:41 IST
ஒட்டன்சத்திரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இடையகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
-
Jun 18, 2025 09:23 IST
சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் நாளை மறுநாள் ரத்து
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
-
Jun 18, 2025 09:18 IST
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்து உள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Jun 18, 2025 09:06 IST
முருக பக்தர்கள் மாநாடு: இ-பாஸ் வழங்க கோர்ட் அனுமதி மறுப்பு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி மறுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, வாகனத்திற்கான இ-பாஸ்களை டிஎஸ்பி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 21-ஆம் தேதி காலை 10 மணி வரை முருகன் பக்தர்கள் மாநாட்டுக்கான வாகன பாஸ்களை அந்தந்த டிஎஸ்பி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.