Coimbatore, Madurai, Trichy News Highlights: சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட் உத்தரவு

Coimbatore, Madurai, Trichy News Live- 3 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 3 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai HighCourt questions over Thiruchendur kandha sasti darsan fee Tamil News

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 03, 2025 18:52 IST

    சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட் உத்தரவு

    "மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து அறிக்கை அளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Jun 03, 2025 18:05 IST

    சாத்கர் மலையில் வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து மரணம்:

    வேலூர் அருகே சாத்கர் மலையில்  கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஹரி, விஜய், 
    சபரீசன் ஆகிய 3 பேர் நாட்டுத் துப்பாக்கியுடன்  வேட்டைக்கு சென்றனர்.  அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து ஹரி மரணமடைந்த நிலையில், இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Advertisment
  • Jun 03, 2025 17:19 IST

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி  மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக
     திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 9.82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 03, 2025 16:33 IST

    "உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது"

    நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் கோயில் மற்றும் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தொடர்ந்த பொதுநல வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 03, 2025 16:32 IST

    இரட்டை கொலை - சிறுவன் உள்பட 8 பேர் கைது

    தூத்துக்குடி, கோவில்பட்டி இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடலையூரில் கடந்த 1ம் தேதி இரவு இளைஞர் பிரகதீஷ், கஸ்தூரி ஆகியோர் 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து படுகொலை. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர், 17 வயது சிறுவன் உள்பட 8 பேரை காவல்துறை கைது செய்தது.



  • Jun 03, 2025 16:31 IST

    சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    செவ்வாய் கிழமை என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம், கட்டண தரிசன பாதையை மாற்றியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.  மாற்றுத்திறனாளிகள் பாதையில் கதவு பூட்டப்பட்டதால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jun 03, 2025 15:12 IST

    சேலத்திற்கு ஸ்டாலின் வருகை

    சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள அரசு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.  மே 12ம் தேதி சேலம் மோகன் குமாரமங்கலம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். 



  • Jun 03, 2025 14:37 IST

    மதுரை மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் 8 பேரை மாற்றம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

    பா.ம.க-வில் டாக்டர் ராமதாஸ் - மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், மதுரை மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் 8 பேரை மாற்றி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.



  • Jun 03, 2025 11:55 IST

    திருச்செந்தூர் கோயில் மே மாத உண்டியல் காணிக்கை

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மே மாத மட்டும் சுமார் 3.42 கோடி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.,



  • Jun 03, 2025 11:52 IST

    உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா

    Credit: Sun News 



  • Jun 03, 2025 11:39 IST

    காரை திருடிச் சென்ற நபர் கைது.

    கோவை சிங்காநல்லூரில் கார் வாங்குவது போல ஷோ ரூம் சென்று அங்கு நிறுத்தி வைக்க்கப்படிருந்த காரை திருடிச் சென்ற கர்ணன் என்பவர் கைது



  • Jun 03, 2025 09:56 IST

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

    பக்ரீத், முகூர்த்த நாட்களை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கடந்த வாரத்தில் சராசரியாக ரூ. 8 ஆயிரம் விற்பனையான ஒரு ஆடு இன்று ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, 35 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ. 50 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



  • Jun 03, 2025 09:45 IST

    ஆலங்குளத்தில் விநாயகர் சிலையை உடைத்த மர்ம நபர்கள்

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குருவன் கோட்டையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சார்பில் ஆலங்குளத்தில் கடந்த மே 1 ஆம் தேதி புதிதாக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். காலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்த பின்னரே சிலை சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது. 



  • Jun 03, 2025 09:44 IST

    சிவகங்கை அருகே 2 பேர் அடித்துக் கொலை - விசாரணை

    சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகரி கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஆடு திருட வந்ததாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் அண்ணன், தம்பி இருவர் பலியாகினர். தப்பித்து ஓட முயற்சி செய்த இருவரையும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர்.



  • Jun 03, 2025 09:34 IST

    8 பேர் பலி விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு சீல்

    வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியார் பல் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமலும், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மருத்துவமனையின் இந்தச் செயலால் பாக்டீரியா தொற்று ஏற்பட்ட 10 பேரில் 8 பேர் பலியானதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.



  • Jun 03, 2025 09:09 IST

    தூத்துக்குடியில் கத்தி, அரிவாளுடன் சுற்றிய 9 ரவுடிகள் கைது

    தூத்துக்குடி மாவட்டத்தில் கத்தி, அரிவாளுடன் சுற்றித் திரிந்த 9 ரவுடிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரவுடிகளை கைது செய்தனர்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: