Coimbatore, Madurai, Trichy News: பழனியில் அதிர்ச்சி - இளைஞரை கட்டி வைத்து தாக்குதல; 3 பேர் கைது

Coimbatore, Madurai, Trichy News Live- 19 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 19 June 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
palani
மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜூன் 19) காலை வினாடிக்கு 6,829 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை வினாடிக்கு 6,040 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,829 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியிலிருந்து 113.81 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 83.94 டிஎம்சியாக உள்ளது.
  • Jun 19, 2025 23:11 IST

    மன நிம்மதி போய் விட்டது: அன்புமணி ராமதாஸ்

    தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்  "பாமகவின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து மன நிம்மதி போய் விட்டது" என்று கூறியுள்ளார்.



  • Jun 19, 2025 23:10 IST

    இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் சென்ற 10 வயது சிறுவன் விபத்தில் மரணம்

     நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச் சாவடி அருகே இரு சக்கர வாகனத்தில் இரு நண்பர்களுடன் சென்ற 10 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு. முன்னே சென்ற லாரி மீது மோதியதில் விபத்து நடந்துள்ளது. மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதி



  • Advertisment
  • Jun 19, 2025 19:28 IST

    காதலி வீட்டில் காதலன் தற்கொலை

    ஐ.டி-யில் பணியாற்றும் கன்னியகுமாரியைச் தனுஷ் (22) என்பவர் பெண் ஒருவரை 8 ஆண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காதலியின் வீட்டின் பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் தனுஷ் பிணமாக மீட்டெக்கப்பட்டுள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது பெற்றோர், உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள். 

     



  • Jun 19, 2025 19:14 IST

    11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

    தஞ்சை, திருவிடைமருதூர் அருகே  11ம் வகுப்பு மாணவிக்கு டியூசனில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரசு பள்ளி ஆசிரியர் ரமேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Jun 19, 2025 19:08 IST

    முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி சொத்துகளை முடக்க முடிவு

    சென்னையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது. கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி கொடைக்கானலில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகளை கணக்கெடுத்து அதனை முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மகேஸ்வரியின் கூட்டாளிகள் யார் யார் என்பது தொடர்பான விவரங்களையும் போலீஸ் சேகரித்து வருகிறது.

     



  • Jun 19, 2025 19:03 IST

    இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் - 3 பேர் கைது

    பழனி, பாப்பம்பட்டி கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் இடையே தகராறு, பெருமாள் புதூரை சேர்ந்த நிர்மல்குமாரை கும்பலாக கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த நிர்மல்குமாருக்கு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Jun 19, 2025 17:49 IST

    சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வங்கதேச இளைஞர்கள் கைது

    திருப்பூரில் போலி ஆதார் ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச இளைஞர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆதார் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.



  • Jun 19, 2025 17:32 IST

    நெல்லையில் ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் கைது

    நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 2023ல் வள்ளியூரைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த உமா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் ஏற்கெனவே 2024ல் ரெஜின் என்பவரை கைது கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jun 19, 2025 17:09 IST

    சாலை விபத்தில் உயிரிழந்த சப்-கலெக்டருக்கு நிவாரண நிதி

    திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். இதவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • Jun 19, 2025 16:51 IST

    கோவை: டூவீலரில் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்தல்

    கோவை வழியாக இருசக்கர வாகனத்தில் ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்தி சென்ற இருவரை பிடித்து கேரளா கலால் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை-கேரளா எல்லையான வாளையாறு கலால் சோதனைச் சாவடி அருகே கலால் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எந்த விதமான ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.60 லட்சத்தை கலால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



  • Jun 19, 2025 16:46 IST

    கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி

    கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் மாங்கனி கண்காட்சி நடைபெறும். புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தரும் வகையிலும் மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.



  • Jun 19, 2025 16:35 IST

    தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

    தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 19, 2025 16:08 IST

    தாய் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

    செங்கல்பட்டு, தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. காச நோய் காரணமாக தாய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பால் குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 19, 2025 16:03 IST

    தி.மலை: பள்ளி மாணவர்களிடையே மோதல் - கத்திக்குத்து

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 2 மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போது, ஒரு மாணவர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் சதீஷ்குமார் படுகாயம் அடைந்துள்ளார். கழுத்தில் படுகாயம் அடைந்த மாணவன் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 19, 2025 16:02 IST

    அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

    திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, பிரதான கால்வாயின், புதிய பாசனப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு நாளை முதல் ஜூலை 5 வரை 15 நாட்களுக்கு, அமராவதி அணையின் பிரதானக் கால்வாய் மதகு வழியாக 440 கன அடி / வினாடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் அமராவதி அணை புதிய பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.



  • Jun 19, 2025 15:33 IST

    நித்யானந்தா எங்கே உள்ளார் என நீதிபதிகள் கேள்வி

    கைலாசா எங்கு உள்ளது அங்கு எப்படி செல்வது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



  • Jun 19, 2025 14:57 IST

    தருமபுரி அருகே டிப்பர் லாரி மோதி 2 மாணவர்கள் உயிரிழப்பு

    அதியமான்கோட்டை அருகே டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்தனர். டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கார்த்தி (19) உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



  • Jun 19, 2025 14:04 IST

    மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

    டியூசனுக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஆசிரியர் ரமேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jun 19, 2025 12:58 IST

    திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்து: முசிறி கோட்டாட்சியர் உயிரிழப்பு

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆ.ர.முக. தேவசேனா உயிரிழந்தார். கோட்டாட்சியர் தேவசேனா பயணம் செய்த வாகனத்தின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.



  • Jun 19, 2025 10:58 IST

    சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர் கைது செய்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

    போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிப்பு



  • Jun 19, 2025 10:34 IST

    தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அத்துமீறல்

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விரட்டியடித்த இலங்கை கடற்படை
    தடை காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் அதிர்ச்சி; மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை



  • Jun 19, 2025 09:47 IST

    அகஸ்தியர் அருவியில் கட்டணமின்றி குளிக்க அனுமதி

    நீதிமன்ற உத்தரவுப்படி அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்கள் இன்று (ஜூன் 19) முதல் கட்டணமின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் கட்டணமின்றி அகஸ்தியர் அருவிக்கு சென்று வர வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Jun 19, 2025 09:36 IST

    சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 26 பேர் கைது

    பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லடம் டி.கே.டி. மில் பகுதியில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 19, 2025 09:19 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக குற்றச்சாட்டு. படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



  • Jun 19, 2025 09:19 IST

    108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி 50% நிறைவு

    இந்தியாவில் 4 இடங்களில் தலா 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிம்லா மற்றும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆஞ்சநேயர் சிலைகளுக்கான பணிகள் முடிந்து திறக்கப்பட்டுவிட்டன. தற்போது ராமேஸ்வரத்தில் சுமார் ரூ.100 கோடியில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 50% பணி முடிவடைந்து உள்ளது. உயரமான பீடம் அமைக்கப்பட்டு அதில் ஆஞ்சநேயர் நிற்பது போன்று சிலை அமைக்கப்படுகிறது. சிலையின் பாதத்தில் இருந்து இடுப்பு வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.



  • Jun 19, 2025 09:17 IST

    ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு - கோவையில் 4 பேர் கைது

    கோவையில் ISIS  அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக NIA ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் அகமது அலி மற்றும் அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவர் உட்பட 4 பேரை  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



  • Jun 19, 2025 09:10 IST

    கரூர்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் தமிழழகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். நேற்று இரவு கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் வைத்து தமிழழகனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது, போலீசாரை அரிவாளால் தமிழழகன் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துப்பாக்கியால் தமிழழகனின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டார். இதில் அந்த இடத்திலேயே ரவுடி சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அவரை போலீசார் பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி தமிழரசன் கைது செய்த போலீசார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: