Coimbatore, Madurai, Trichy News Highlights: மாணவர்கள் வண்ணக் கயிறுகள் கட்டி பள்ளிக்கு வரக்கூடாது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Students

மேட்டூர் அணையின் நீர் நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6234 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 82.743 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.

  • Jun 04, 2025 17:23 IST

    பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணக் கயிறுகள் கட்டி பள்ளிக்கு வரக்கூடாது

    பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணக் கயிறுகள் கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என நெல்லை மாவட்ட முதன்மை கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Jun 04, 2025 16:13 IST

    புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகள் ஆய்வு

     கோவை காரமடையை அடுத்த பிளிச்சி பகுதியில் ரூ.312 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மத்திய சிறையின் கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் சைலேஷ் குமார் ஆய்வு செய்தார். ஆண், பெண் கைதிகளுக்கான சிறைச்சாலை, சிறைக் காப்பாளர் குடியிருப்பு என 3 கட்டங்களாக நடைபெறும் பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும் எனவும் அவர் பேட்டி அளித்தார். 



  • Advertisment
  • Jun 04, 2025 16:10 IST

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 8ஆம் தேதி மதுரை வருகை

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 8ஆம் தேதி மதுரை வருகை முக்கிய பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.



  • Jun 04, 2025 15:59 IST

    சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

    சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி அணையிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jun 04, 2025 15:40 IST

    கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். மனுதாரரின் 25 ஆயிரத்தை கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.



  • Jun 04, 2025 15:40 IST

    ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

    நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



  • Jun 04, 2025 14:48 IST

    கொரோனா தொற்று பரவலால் மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை

    கொரோனா தொற்று பரவலால் மதுரை விமான நிலையம் வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடம் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பு பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. காய்ச்சல், இருமல் பாதிப்பு இருக்கும் பயணிகளுக்கு ஸ்கேனர் கண்காணிப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை பொறுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.



  • Jun 04, 2025 14:18 IST

    முகூர்த்த நாட்கள், வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு!

    நாட்கள், வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூ.250க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • Jun 04, 2025 14:17 IST

    சிவகாசி சிவன் கோயிலில் பாதியில் நிறுத்தப்பட்ட தேரோட்டம்

    சிவன் கோயில் வைகாசி விசாக தேரோட்டத்தில் வடக்கு வாசலில் தேரை நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேரை நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேரோட்டம் நடைபெறாமல் ரத வீதியில் நிறுத்தப்பட்டது. போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் தேரோட்டம் நடந்தது.



  • Jun 04, 2025 13:19 IST

    கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு

    அமைச்சர் கே.என்.நேரு: “கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன” என்று கூறினார்.



  • Jun 04, 2025 13:10 IST

    திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்

    திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடத்த ந்புணர் குழு பரிந்துரைத்துள்ளது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள சிவராம சுப்ரமணிய சாஸ்திரி, 12.05 முதல் 12.45 வரை குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.



  • Jun 04, 2025 12:52 IST

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. வினாத்தாள் கசிந்த வழககு: சி.பி.சி.ஐ-டிக்கு மாற்ற பரிந்துரை

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற பரிந்துரைப்பதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமனி தெரிவித்துள்ளார்.



  • Jun 04, 2025 12:29 IST

    பா.ம.க-வில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளை மாற்றி டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

    நெல்லை மாவட்ட தெற்கு, மேற்கு மாவட்ட செயலாளர்களை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.



  • Jun 04, 2025 11:17 IST

    முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து 47.50 அடி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.



  • Jun 04, 2025 10:30 IST

    மேட்டூர் அணையில் ஆய்வு

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க இருக்கும் நிலையில், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் இன்று அணையில் ஆய்வு

    Mettur



  • Jun 04, 2025 09:25 IST

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6900 கன அடியாக உயர்வு

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2300 கன அடியில் இருந்து 6900 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.



  • Jun 04, 2025 09:23 IST

    குமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் நாளை முதல் உயர்வு

    குமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் நாளை முதல் உயர்வு என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சாதாரண கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது



  • Jun 04, 2025 09:11 IST

    மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6234 கனஅடி நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6234 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 82.743 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: