/indian-express-tamil/media/media_files/2025/08/23/dog-attack-2025-08-23-21-33-25.jpg)
மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோர் காயம்
Today Latest News Live Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 23, 2025 22:29 IST
பொன்னேரி: அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து
பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- Aug 23, 2025 22:15 IST
மேட்டுப்பாளையம்-கோவை ரயில் ஆக.25-ல் ரத்து
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திங்கட்கிழமை (ஆக.25) கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- Aug 23, 2025 21:30 IST
மயிலாடுதுறை: வெறி நாய் கடித்து 20+ பேர் காயம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Aug 23, 2025 20:44 IST
சுவர் இடிந்து விழுந்த இடத்தில் எஸ்.பி. விசாரணை
கடலூர் சிப்காட் ரசான தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து பலியான இளமதி (35 ), இந்திரா(32) சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். திறப்பு விழா கண்ட 2 மாதங்களுக்குள் சுவர் இடிந்த நிலை. வட மாநிலத்தவர்கள் கட்டிட பணி செய்ததாக கூறப்படுகிறது.
- Aug 23, 2025 20:23 IST
15 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 23, 2025 19:51 IST
கடலூர் சிப்காட்டில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிடப் பணிகளை மேற்கொண்டிருந்த இளமதி (35 ), இந்திரா (32) இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
- Aug 23, 2025 19:26 IST
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
சிவகாசி பேருந்து நிலையம் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து; தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இயந்திரம் மூலம் தீக்குச்சியில் ரசாயன பொருளை செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு தீவிபத்து. தீவிபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- Aug 23, 2025 18:42 IST
சேலம்: வளர்ப்பு நாய் கடித்து இளைஞர் உயிரிழப்பு
சேலம் ஆத்தூரில் ஓராண்டுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்து, முறையான சிகிச்சை பெறாமல் இருந்த தர்மன் (27) என்ற இளைஞர் ரேபிஸ் தொற்று தாக்கி, நேற்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்படவே, மருத்துவமனைக்குச் சென்று சோதித்தபோதுதான் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்
- Aug 23, 2025 18:25 IST
பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் -ரயில்வே
110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற இந்திய ரயில்வே டெண்டர் கோரியது. சுமார் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் 4 மாதத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Aug 23, 2025 18:17 IST
மேட்டூர்: நீர்வரத்து வினாடிக்கு 10,850 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மாலை நிலவரப்படி வினாடிக்கு 15,850 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
- Aug 23, 2025 17:42 IST
மதுரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 6 பேர் காயம்
மதுரை: மேலூர் அருகே அழகர் கோவில் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் ஆறு பேர் காயமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Aug 23, 2025 17:40 IST
இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னை வானிலை மைய தகவல்
- Aug 23, 2025 16:47 IST
மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது அஸ்பியா பானு (13) மற்றும் சபீகா பானு (10) மின்னல் தாக்கி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
- Aug 23, 2025 16:37 IST
மதுரையில் சாரல் மழை
மதுரையில் தெப்பக்குளம் காமராஜர் சாலை தெற்கு வாசல் வில்லாபுரம் பெரியார் நிலையம் போன்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது
- Aug 23, 2025 16:09 IST
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால், சாலை சேதமடைந்து குண்டும் - குழியுமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
- Aug 23, 2025 16:08 IST
விசாரணைக்கு வந்தவர் மரணம்
சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த முதியவர் துரைசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 23, 2025 13:37 IST
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்பெண்ட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 23, 2025 12:44 IST
காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் ரத்து
நெல்லை பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு விதித்த ரூ.2 லட்சம் அபராதத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ. ராஜரத்தினத்துக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தாவும் ரத்து செய்யப்பட்டது. மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கியதாக எஸ்.ஐ. மீது வழக்கு தொடரப்பட்டது.
- Aug 23, 2025 12:26 IST
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் - பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, பக்தர்களின் "அரோகரா" முழக்கம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விண்ணை எட்டும் அளவுக்கு ஒலித்து வருகிறது. மேலும் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள்.
- Aug 23, 2025 10:10 IST
12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - இன்று முதல் கடலுக்குச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்
12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கடந்த 11 நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் 12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.