Coimbatore, Madurai, Trichy News LIVE: கிட்னி விற்பனை விவகாரம்: மக்களின் உரிமையை பாதுகாக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai High Court

பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து மனமகிழ் மன்றங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

Today Latest Live News Update in Tamil 19 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 19, 2025 14:23 IST

    கிட்னி விற்பனை விவகாரம்: மக்களின் உரிமையை பாதுகாக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

    சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாணையில்,கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என அறிவுறுத்தியுள்ளனர்.

     



  • Aug 19, 2025 12:51 IST

    தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம்

    தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூரைச் சேர்ந்த மனுதாரர் அமல்ராஜுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் அமல்ராஜ்.



  • Advertisment
  • Aug 19, 2025 12:42 IST

    நெல்லை ஆணவக் கொலை வழக்கு: கவினுடன் பேசியவர்களிடம் விசாரணை

    நெல்லை ஆணவக் கொலை வழக்கில் ஜூலை 27ல் கவினுடன் செல்போனில் பேசியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 27ல் கவின் கொலை செய்யப்படுவதற்கு முன் அவருடன் பேசியவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். கவின் ஆணவக்கொலை வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் கைது செய்யப்பட்டனர்.



  • Aug 19, 2025 12:19 IST

    விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை!!

    விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கினார். அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது என அரசு பேருந்து ஒட்டுநர். நடத்துநருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார். படியில் தொங்குபவர்களை கண்டுகொள்ளாவிடில் உங்கள் மீது புகார் கூற வேண்டியிருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 19, 2025 11:19 IST

    ரயில் மறிப்பு போராட்டம் 

    ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் இன்று மாலை ரயில் மறிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். 



  • Aug 19, 2025 11:12 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணி நிலவரப்படி 43,000 கனஅடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியை தாண்டியது. கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Aug 19, 2025 10:20 IST

    பதக்கங்கள் வென்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி எஸ். பி

    காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டினாா். 

    தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கான 69-ஆம் ஆண்டு காவல் துறை திறனாய்வுப் போட்டி கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.
    இதில், திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் விஜயகுமாா், தடய அறிவியல் புலனாய்வுப் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூா் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலா் ராம்கி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சிறுகனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் முருகானந்தம் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

    இந்நிலையில், பதக்கம் வென்ற காவலா்களை தமது அலுவலகத்துக்கு வரவழைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்  செ.செல்வநாகரத்தினம் பாராட்டினாா். பிரபலங்களும் தத்தம் மடல்களை காண்பித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Aug 19, 2025 10:19 IST

    திருவண்ணாமலை  - அண்ணாமலையாரை தரிசித்த இளையராஜா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கியுள்ளனர். 



Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: