Coimbatore, Madurai, Trichy News updates: சித்ரா பவுர்ணமி - திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bus

சித்ரா பவுர்ணமி - திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

15-ந்தேதி தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி:

Advertisment

கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி இந்த ஆண்டு 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி ஒருநாள் முன்னதாகவே அதாவது 15-ந் தேதி தொடங்க உள்ளதாகவும், 6 நாள் நடத்த திட்டமிட்ட இருந்த நிலையில் கண்காட்சி தற்போது 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

  • May 08, 2025 15:04 IST

    சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பஸ்கள்

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே, 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கும்பகோணத்தில் இருந்து 145 பஸ்கள், திருச்சி, துறையூர், பெரம்பலூரில் இருந்து 190 பஸ்கள், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து 58 பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து 65 பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 50 பஸ்கள், காரைக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து 48 பஸ்கள், புதுக்கோட்டையில் இருந்து 51 பஸ்கள் என மொத்தம் 607 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.



  • May 08, 2025 14:45 IST

    ”வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை கட்டாயம் பதிவு செய்க”

    கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை பண்ணை உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தொழில்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • May 08, 2025 14:22 IST

    திருச்சியில் அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்த ஸ்டாலின்

    திருச்சி துவாக்குடியில் அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்த ஸ்டாலின், மாணவர்களுடன் கலந்துரையாடினார்



  • May 08, 2025 13:00 IST

    திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு விருந்து

    மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 7,000 கிலோ அரிசி, 12 டன் காய்கறியுடன் பக்தர்களுக்கு விருந்து திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. 



  • May 08, 2025 09:28 IST

    வெகுவிமர்சையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்: மதுரையில் குவிந்த பக்தர்கள்

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. திருக்கல்யாணத்தின்போது ஏராளமான பெண்கள் தங்கள் தாலிகளை மாற்றி புதுப்பித்துக்கொண்டனர்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: