Coimbatore, Madurai, Trichy News Highlights: மாணவர் கீர்த்திவர்மாவிற்கு இலவச வீட்டுமனை பட்டா

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Patta for student

15-ந்தேதி தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி: கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி 15-ந் தேதி தொடங்குகிறது. 

Advertisment

பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்: பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் சர்க்கரை தீபங்கள் ஏற்றி கள்ளழகரை வரவேற்றனர். லட்சக்கணக்கான மக்கள், கோவிந்தோ... கோவிந்தோ... எனும் பக்தி முழக்கத்துடன் கள்ளழகரை வழிப்பட்டனர்.

  • May 12, 2025 21:58 IST

    மாணவர் கீர்த்திவர்மாவிற்கு இலவச வீட்டுமனை பட்டா

    இரு கைகளும் இன்றி 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்று 471 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கீர்த்திவர்மாவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.



  • May 12, 2025 18:49 IST

    போக்குவரத்து போலீசாக மாறிய எம்.எல்.ஏ

    கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ செந்தில்குமார் போக்குவரத்து போலீசாராக மாறி போக்குவரத்தை சீர்செய்தார் 



  • Advertisment
    Advertisements
  • May 12, 2025 18:31 IST

    அரக்கோணம் அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது; புறநகர் ரயில் சேவை பாதிப்பு

    மணவூர் - திருவாலங்காடு இடையே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது



  • May 12, 2025 17:22 IST

    ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்

    ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் 3வது மாடி மீது ஏறி த*கொலை மிரட்டல் விடுத்த  பெண்ணால் பரபரப்பு. தனது புகார் மனு மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி ஆத்திரம் பொதுமக்கள் குறைதீர் கூட்ட முகாமிற்கு வந்த பெண் திடீரென த*கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி



  • May 12, 2025 17:20 IST

    ராசிபுரம் அருகே நள்ளிரவில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடி

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நள்ளிரவில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடியால் பரபரப்பு. சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞர் துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



  • May 12, 2025 16:07 IST

    கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!

    தஞ்சை மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. தஞ்சை விமானப்படை தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர், பயிற்சிக்காக வந்து சென்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

     



  • May 12, 2025 15:21 IST

    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



  • May 12, 2025 14:35 IST

    காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் மா.சு தகவல் 

    காஞ்சிபுரத்தில் ரூ.372 கோடியில் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • May 12, 2025 13:57 IST

    சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

    சேலம், ஆத்தூர் அடுத்த செல்லியம்பாளையத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குளாகியது. விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர்  படுகாயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • May 12, 2025 13:31 IST

    200 கோயில்களில் கூடுதலாக குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு

    200 கோயில்களில் கூடுதலாக குடமுழுக்கு! நடப்பாண்டு இறுதிக்குள் 200 கோயில்களில் கூடுதலாக குடமுழுக்கு நடத்தப்படும். கோயில் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.50 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாரும் எந்த குறையும் கூற முடியாத அளவிற்கு கோயில்களில் பணிகள் நடைபெறுகின்றன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 



  • May 12, 2025 13:01 IST

    ஆட்டோவுக்கு போட்டியாக களமிறங்கிய மாட்டு வண்டி

    சித்ரா பௌர்ணமியால் திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம், 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம். ஆட்டோவில் பயணிக்க ரூ.100 மற்றும் மாட்டு வண்டியில் பயணிக்க ரூ.௨௦ ஆகவும் விலை முடிவு செய்து மக்கள் பயணம் செய்து வருகின்றனர். 



  • May 12, 2025 12:47 IST

    ரயிலை கவிழ்க்க சதி- சாமியார் கைது

    திருவாலங்காடு, கொரட்டூர் அருகே தண்டவாள இணைப்புகளில் போல்ட், நட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதிச் செயலில் ஈடுபட்டதாக சாமியார் கைது.  உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹோம் என்ற சாமியாரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்



  • May 12, 2025 12:36 IST

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் என்னால் ரத்தம் கொடுக்க முடியவில்லை - ஜெயசுதா விளக்கம்

    எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான முகாமில், ரத்த தானம் கொடுப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதிமுக திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் ஜெயசுதா. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் என்னால் ரத்த தானம் கொடுக்க முடியவில்லை என்று  ஜெயசுதா விளக்கம் தெரிவித்துள்ளார். 



  • May 12, 2025 11:49 IST

    கள்ளழகருக்கு தீர்த்தவாரி

    மதுரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை பக்தர்கள் மனம் குளிர வைத்தனர். 



  • May 12, 2025 11:07 IST

    திருவண்ணாமலையில் கூட்ட நெரிசல்

    சித்ரா பெளர்ணமியை ஒட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேல் ஆவதால் தண்ணீர், மோர், கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.



  • May 12, 2025 10:37 IST

    மீண்டும் தொடங்கிய வடகலை - தென்கலை பிரச்சினை

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் வடகலை - தென்கலை பிரச்சினை தொடங்கியது.  2ம் நாளான இன்று வரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். வடகலை பிரிவினர் பெருமாள் முன்பு தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



  • May 12, 2025 10:30 IST

    சேலத்தில் தம்பதி கொலை- ஒருவர் கைது

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் குடியிருக்கும் பீகாரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீஸ் கைது செய்தனர். தம்பதி பாஸ்கரன், வித்யாவை அடித்துக் கொலை செய்து 10 சவரன் நகைகள் திருடி சென்றனர்.



  • May 12, 2025 10:15 IST

    சித்திரை திருவிழாவுக்கு சென்ற பாஜக நிர்வாகிக்கு தடை: காவல்துறை நடவடிக்கை

    மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பாஜகவின் தேசிய சிறுபான்மையினர்  மோர்ச்சாவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.



  • May 12, 2025 10:09 IST

    உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும்: சேகர்பாபு

    சித்திரை திருவிழாவில் உயிரிழப்பு நேர்ந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் உயிரிழந்தோர் குறித்து தகவல்களை சேகரித்து வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.  



  • May 12, 2025 09:30 IST

    ராமேசுவரம் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு

    காசி யாத்திரை முடிந்து அங்கிருந்து காசி தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது சகோதரிகள் மற்றும் மகன் ரவீந்திரநாத்துடன் மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தார். அவர் கங்கை தீர்த்தம் அடங்கிய கலசத்தை கோவிலின் விசுவநாதர் சன்னதி எதிரே வைத்து ருத்ராபிஷேக பூஜை செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரிகள், மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தரிசனம் செய்தனர். 



  • May 12, 2025 09:26 IST

    கோவையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

    கோவையில் மே 17ம் தேதி நடைபெற இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாக். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



  • May 12, 2025 09:25 IST

    மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர் உயிரிழப்பு

    மதுரை வைகை ஆற்றில் கள்ளழகரை காண வந்திருந்த கூட்டத்தில் இருந்த பூமிநாதன் (45) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும் பூமிநாதன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.



Coimbatore Madurai Trichy Salem

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: