Coimbatore, Madurai, Trichy News: 2026 தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடையும் - இ.பி.எஸ் விமர்சனம்

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPS campaign

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்” என்று பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 03, 2025 20:47 IST

    தி.மு.க படுதோல்வி அடையும் - இ.பி.எஸ் விமர்சனம்

    மதுரையில் பரப்புரையில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடையும்; தி.மு.க ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. நமது குழந்தைகள் நம் கண் முன்னே அழிந்து போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது” என்று என்று விமர்சனம் செய்து காட்டமாகப் பேசினார்.



  • Sep 03, 2025 18:12 IST

    திடீரென காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த முர்மு

    ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, விமான நிலையம் செல்லும் வழியில், சாலையோரம் காத்திருந்த மக்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.

    Credit: Sun News



  • Advertisment
    Advertisements
  • Sep 03, 2025 17:31 IST

    மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முர்மு உரை

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர், மனிதகுலத்தின் பெரும் நன்மைக்காகவும், குறிப்பாக இயற்கை மற்றும் சூழலியலை வளப்படுத்தவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



  • Sep 03, 2025 17:24 IST

    திருப்பூரில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

    திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் இருந்த மருந்து பொருட்களும், தரைத்தளத்தில் இருந்த பனியன் துணிகளும் எரிந்து சேதமாகின. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 10 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.



  • Sep 03, 2025 17:12 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் மட்டும் இயக்க அனுமதி

    நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Sep 03, 2025 17:09 IST

    கோவை: தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

    கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் மற்றும் வார சந்தைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி நிர்வாகம். கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.



  • Sep 03, 2025 17:08 IST

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம்

    இன்று நடைபெறவுள்ள திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்துள்ளார்.



  • Sep 03, 2025 16:19 IST

    நாணயங்களை விழுங்கிய 7 வயது சிறுமி; காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

    திருப்பத்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 7 வயது மகள் நிஸ்பா, விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ஒரு ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை விழுங்கியுள்ளார். நாணயங்கள் தொண்டையில் சிக்கியதால் உடனடியாக நிஸ்பா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, நாணயங்கள் உணவு குழாயில் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக மயக்க மருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை அரங்கில் நாணயங்களை வெற்றிகரமாக வெளியேற்றினர்.



  • Sep 03, 2025 15:58 IST

    சிறுமி கர்ப்பம் - இளைஞர் போக்ஸோவில் கைது

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 18 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுமி காதலித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பம் ஆனதை அடுத்து, அந்த இளைஞர் கைதானார். சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.



  • Sep 03, 2025 15:23 IST

    தொட்டியம் அருகே இளைஞர் தலை துண்டித்து படுகொலை: மூவர் கைது

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடி கிராமத்தில், சுரேஷ் என்ற இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, கல்பேஸ், அஸ்வின் குமார், பரமேஸ்வரன் ஆகிய மூவரையும் தொட்டியம் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கல்பேஸின் தம்பியான தியாகுவை, கொலை செய்யப்பட்ட சுரேஷ் ஏற்கனவே வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில், கல்பேஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சுரேஷின் தலை முள்ளிப்பாடி ஏரியில் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Sep 03, 2025 15:21 IST

    300க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம்: கண்டன ஆர்ப்பாட்டம்

    சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், அரசாணையின்படி தர ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டி வலியுறுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 



  • Sep 03, 2025 13:29 IST

    ஒன்றிய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

    நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டம். ஒன்றிய அரசின் பல்கலை. மானியக் குழுவின் வரைவறிக்கையை திரும்ப பெற கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை ஒன்றிய அரசு திணிப்பதாக மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.



  • Sep 03, 2025 13:14 IST

    குடியரசுத் தலைவர் திருச்சி வருகை; ஆளுநர் அமைச்சர்கள் வரவேற்பு

    2 நாள் பயணமாக நேற்று சென்னை வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நண்பகல் திருச்சி வந்தடைந்தார்.
    திருச்சி விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, கீதா ஜீவன் ஆகியோர் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

    இதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.30 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
    பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்சக்கரையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்த பிறகு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். இரவு 7 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.



  • Sep 03, 2025 13:05 IST

    திரெளபதி முர்மு இன்று சாமி தரிசனம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளதை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகிறது. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்களுக்கு கோயிலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Sep 03, 2025 12:25 IST

    எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

    எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கதக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.



  • Sep 03, 2025 12:09 IST

    சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

    சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு அறை மட்டும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்துள்ளனர்.



  • Sep 03, 2025 12:01 IST

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Sep 03, 2025 11:43 IST

    செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி சத்தியபாமா பேட்டி

    ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான சத்தியாபாமா, "அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். செப்டம்பர் 5-ஆம் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன். அ.தி.மு.க நலன் கருதி செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார். 2026ல் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் நோக்கம்" என்று கூறியிருக்கிறார். 



  • Sep 03, 2025 11:37 IST

    அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன் - செங்கோட்டையன் பேச்சு 

     

    கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், "அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். யாரையும் நான் அழைக்கவில்லை" என்று கூறியுள்ளார். 



  • Sep 03, 2025 10:49 IST

    திருச்சியில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை

    திருச்சியை அடுத்த முசிறியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலையை துண்டித்து எடுத்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி இருக்கிறது. இளைஞரின் உடலை மீட்டு தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 



  • Sep 03, 2025 10:24 IST

    திருச்சி - சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - பயணிகள் அவதி!

    திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் புறப்பட்ட தயாரான சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். பயணிகள் விமானத்திற்குள் அமர்ந்திருந்த நிலையிலேயே, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பழுதுநீக்கும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பணிகள் முடிவடையாததால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Sep 03, 2025 09:45 IST

    தலைமை ஆசிரியருக்கு கை கால்களை பிடித்துவிடும் மாணவர்கள் - வீடியோ வெளியாகி கடும் சர்ச்சை 

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியை கலைவாணி, பள்ளி நேரத்தில் மாணவர்களை வைத்து கை கால்களை பிடித்துவிடும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெற்றோரின் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.



  • Sep 03, 2025 09:45 IST

    ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்ய உள்ள நிலையில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குமேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.



Trichy Coimbatore Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: