/indian-express-tamil/media/media_files/2025/08/27/kulasekara-pattinam-2025-08-27-17-13-27.jpg)
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே குளித்து முடித்து பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் முழுவதிலுமுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. தொடர்ந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
- Aug 27, 2025 19:32 IST
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க: கவலை தெரிவித்த திருமா
"ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டிற்கு அ.தி.மு.க சென்று விட்டது என்பது கவலையளிக்கிறது” என்று திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- Aug 27, 2025 18:26 IST
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 24 பெண்கள் உள்பட இந்து முன்னணியினர் 36 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
- Aug 27, 2025 17:52 IST
குமரி அருகே ரப்பர் சீட் உலையில் பயங்கர தீ -பரபரப்பு
குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் உள்ள களியல் அருகே கட்டச்சல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தின் உள் பகுதியில் ரப்பர் சீட் உலர் கூடத்தில் மாலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளனெ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவலறிந்துவந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
- Aug 27, 2025 17:31 IST
விஜய்யின் விமர்சனத்துக்கு எல்.முருகன் பதிலடி
அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு? என ஆர்.எஸ்.எஸ். கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் திருந்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
- Aug 27, 2025 17:09 IST
18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aug 27, 2025 17:04 IST
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: அடிக்கல் நாட்டும் விழா
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முள் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முள் வேலி அமைக்கும் பணிகளும் முடிந்த நிலையில், இன்று ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
- Aug 27, 2025 16:46 IST
விஜய் மீதான வழக்கு மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றம்
த.வெ.க. மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியதில் காயம் ஏற்பட்டதாக சரத்குமார் என்ற இளைஞர் குன்னம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்காக கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- Aug 27, 2025 16:32 IST
பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு எரிந்த டீ கடை
கடலூர்: விருத்தாசலம் அருகே இறுதிச் சடங்கின்போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு எரிந்த டீ கடை. சாதிக் பாஷா என்பவரின் டீ கடை எரிந்து முழுவதும் சேதமடைந்தது. கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக், கடைக்குள் இருந்த பொருட்கள், ரூ.6,000 பணம் என அனைத்தும் எரிந்தன. தீயணைப்புத் துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
- Aug 27, 2025 15:35 IST
தவெக சார்பில் அன்னதானம்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி தவெக கோவை புறநகர் மாவட்ட ராஜ்குமார் தலைமையில் லாலி ரோடு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, கொழுக்கட்டை, அன்னதானம் வழங்கப்பட்டது
- Aug 27, 2025 15:18 IST
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Aug 27, 2025 13:25 IST
அணில் ஏன் ‘அக்கிள் அங்கிள்’னு கத்துகிறது; விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான்: “அணில் ‘ஜங்கள் ஜங்கள்’னு கத்த வேண்டும். அது ஏன் ‘அக்கிள் அங்கிள்’னு கத்துகிறது. கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார்.” என்று விஜய்யின் மதுரை மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
- Aug 27, 2025 11:46 IST
திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படையலிடப்பட்டது. அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
- Aug 27, 2025 11:11 IST
விஷ பூச்சி கடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
வேலூர், விருபாட்சிபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சஞ்சய் விஷ பூச்சி கடித்ததில் வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தான்.
- Aug 27, 2025 10:41 IST
விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை பிள்ளையார்பட்டியில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி தொடங்கியது. அங்குச தேவருக்கு உற்சவ மூர்த்தி கற்பக விநாயகர் முன்னிலையில் பால், தயிர், சந்தனத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டன.
- Aug 27, 2025 10:37 IST
கும்மிடிப்பூண்டி பாலியல் வழக்கு: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
- Aug 27, 2025 10:30 IST
சேலம் அருகே டூவிலரை திருடி மாட்டிக் கொண்ட திருடன்
சேலம்: தீவட்டிபட்டி பேருந்து நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்செல்ல இளைஞர் முயன்ற போது வாகன உரிமையாளரான இளம்பெண், திருடனை பார்த்து சத்தம் போட்டு விரட்டியதில், நிலைதடுமாறிய திருடன் சாலையிலேயே பைக்குடன் விழுந்தார். தொடர்ந்து ஓடிய பெண், ஆத்திரமடைந்து அந்த வாலிபரை தாக்கியபோது, அந்த நபர் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடினார்.
- Aug 27, 2025 09:59 IST
குன்னூர் மார்க்கெட் கடைகளை காலி செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் கடைகளை இடிக்க 2 வாரங்களுக்குள் காலி செய்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 800 கடைகள் உள்ள நிலையில், புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்க உள்ளதால் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
- Aug 27, 2025 09:58 IST
கோவை: அன்னூரில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஏவிஎம் என்கிற பர்னிச்சர் கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஏசி, ஃபிரிட்ஜ், சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- Aug 27, 2025 09:58 IST
தேனி அருகே பொதுமக்கள் சாலைமறியல் - பரபரப்பு
தேனி அருகே கல்குவாரி விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சசி என்கிற சதீஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 27, 2025 09:42 IST
விநாயகர் சதுர்த்தி விழா - ராகுல்காந்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணம் உங்கள் அனைத்து தடைகளையும் நீங்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- Aug 27, 2025 09:39 IST
சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு
ல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்.9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
- Aug 27, 2025 09:38 IST
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
- Aug 27, 2025 09:35 IST
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தங்கம் பூசிய மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விநாயகர். பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.