/indian-express-tamil/media/media_files/2025/01/16/oko270UnwEQz8jGaKExF.png)
ஈரோட்டில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்
அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம், ஈரோட்டில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவை அதிகாலை முதல் தொடங்கின.
11 மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் வரும் செப். 7ம் தேதி வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. கூடுதல் எஸ்.பி. தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
- Aug 26, 2025 12:09 IST
கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
- Aug 26, 2025 12:01 IST
உச்ச நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- Aug 26, 2025 11:58 IST
2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
சட்டவிரோதமாக கேரளாவிற்கு சேலத்திலிருந்து கோவை வழியே கொண்டு செல்லப்பட்ட, 2 டன் 15,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த மதுக்கரை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 26, 2025 11:56 IST
வடமாநில இளைஞர் தற்கொலை
கோவை அரசு மருத்துவமனையின் கழிவறையில் வடமாநில இளைஞர் துய்ப்பில் வரலா (22) உயிரை மாய்த்துக்கொண்டார். தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற சென்ற போது விபரீத முடிவு எடுத்துள்ளார்.
- Aug 26, 2025 11:11 IST
தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்வு
ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1000 ஆக விற்பனை. மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
- Aug 26, 2025 10:45 IST
மதுரையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,500, முல்லை பூ ரூ.1,000, செவ்வந்தி ரூ.1,000, பிச்சிப் பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600 மற்றும் பட்டன் ரோஸ் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- Aug 26, 2025 09:26 IST
கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது
கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணம்பட்டியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் பணம் கேட்டபோது பீகாரை சேர்ந்த விஜய்குமார் ராய் வெறும் ரூ.51 கொடுத்தார் என அசோக், திலீப், தினேஷ் ஆகிய 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து விஜய்குமார் ராய் அளித்த புகாரின்பேரில் 3 பேரை கைது செய்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Aug 26, 2025 09:20 IST
களைகட்டிய சந்தைகள்
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மாநிலம் முழுவதும் சந்தைகள் களைகட்டியது. பூ, பழங்கள், தோரணங்கள், பொரி உள்ளிட்டவற்றை வாங்க மக்களும், வியாபாரிகளும் குவிந்ததால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
- Aug 26, 2025 09:19 IST
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - கடலூரில் தொடங்கி வைத்த அமைச்சர் சி.வெ.கணேசன்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.