/indian-express-tamil/media/media_files/2025/06/16/0UpWphVMknGWz7eJXw5f.jpg)
நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து அப்பர் பவானி – 16.8 செ.மீ, பார்சன்ஸ்வேலி – 13.2 செ.மீ, பந்தலூர் – 13 செ.மீ, சேரங்கோடு – 11.8 செ.மீ, போர்த்தி மந்து – 9.4 செ.மீ, எமரால்டு – 5.7 செ.மீ, தேவாலா – 5.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
Jun 16, 2025 22:04 IST
பா.ம.க பொதுக்குழு - 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், அன்புமணி தலைமையில் பா.ம.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Jun 16, 2025 19:05 IST
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - 7 ஆண்டு சிறை
கோலியனூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ரமேஷ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரமேஷுக்கு 7 ஆண்டு சிறையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Jun 16, 2025 19:01 IST
திருவள்ளூர் - பெயிண்ட், தின்னர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட், தின்னர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து கிடங்கிலிருந்து வானுயர கரும்புகை எழுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
Jun 16, 2025 18:35 IST
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில் பழக்கவழக்கம், மரபுகளை பின்பற்றி குடமுழுக்கு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
Jun 16, 2025 17:25 IST
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகியவை ஆகும்.
-
Jun 16, 2025 16:04 IST
அங்கன்வாடி மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு
தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பணியாளர்கள், செவிலியர்கள் வருகைப் பதிவு உள்ளிட்டவற்றை சரி பார்த்தார்.
-
Jun 16, 2025 15:38 IST
சி.வி.சண்முகம் வழக்கில் ஜூன் 25ம் தேதி தீர்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு தரப்பட இருந்த நிலையில் ஜூன் 25க்கு தீர்ப்பை திண்டிவனம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
Jun 16, 2025 15:38 IST
அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது
அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
Jun 16, 2025 14:43 IST
சீமான் இறக்கியது கள்ளா? பதநீரா? – தூத்துக்குடி எஸ்பி விசாரணை
சீமான் பனைமரம் ஏறி இறக்கியது கள்ளா? அல்லது பதநீரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். சீமான் இறக்கியது கள் என்பது உறுதியானால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தடையை மீறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக சீமான் அறிவித்திருந்தார்.
-
Jun 16, 2025 13:13 IST
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் ஸ்டாலின்
தஞ்சாவூர், ஜூன் 16, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார். இவை மொத்தம் ரூ.97 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஆகும்.
முதலமைச்சர் அறிவித்த திட்டங்களின் விவரம்:
*தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம்: தஞ்சையில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*தென்பெரம்பூர் அருகே புதிய பாலம்: தென்பெரம்பூர் அருகே வெண்ணூறு-வெட்டாறு பிரியக்கூடிய இடத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும். இது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
*சாலையோர விரிவாக்கம் மற்றும் மேம்பாடு: ஈச்சங்கோட்டை முதல் வெடிக்காடு கால்வாய் வரை உள்ள சாலை 40 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*வாய்க்கால் மற்றும் மதகுகள் புனரமைப்பு: உப்பிற்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் அதன் மதகுகள் 15 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இது விவசாயத்திற்கு பெரிதும் உதவும்.
*தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அறிவித்தார். இந்த திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jun 16, 2025 13:08 IST
‘உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஆளுநர் ரவி இன்னும் மாறவில்லை’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் இன்னும் மாறவில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் பேசுகையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை பேரவையில் நிறைவேற்றி 40 நாட்களாகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுமட்டுமின்றி, சந்திக்க நேரம் கொடுத்தால் மசோதா குறித்து கேட்பார்கள் என பயந்து உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
-
Jun 16, 2025 12:24 IST
‘அரைவேக்காட்டுத் தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி’ - ஸ்டாலின் காட்டம்
தஞ்சாவூரில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமான அரசியலை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி; உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளர்.
-
Jun 16, 2025 11:55 IST
தஞ்சாவூரில் விரிவுபடுத்தப்பட்ட மினி பஸ் சேவை தொடக்கம்
தஞ்சாவூரில் விரிவுபடுத்தப்பட்ட மினி பஸ் சேவையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.
-
Jun 16, 2025 11:24 IST
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் , திண்டுக்கல், தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 16, 2025 11:11 IST
அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை இன்று காலை திறக்கப்பட உள்ளதால், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிப்பு
-
Jun 16, 2025 10:22 IST
மணப்பாறை மீன்பிடித் திருவிழா
Video Credit: Sun News
#WATCH | மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா - நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.#SunNews | #Manapparai pic.twitter.com/7Srmk8uNNj
— Sun News (@sunnewstamil) June 16, 2025 -
Jun 16, 2025 10:20 IST
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவு
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர் அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது
-
Jun 16, 2025 09:56 IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 8,438 கனஅடியாக இருந்த நிலையில் 10,577 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84.42 அடி; நீர் இருப்பு18.14 டிஎம்சி; நீர் திறப்பு 855 கனஅடியாக உள்ளது.
-
Jun 16, 2025 09:13 IST
பில்லூர் அணை 2வது முறையாக நிரம்பியது
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பில்லூர் அணை 2வது முறையாக அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. மழை காரணமாக பில்லூர் அணைக்கு 14,160 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பியதால் அணையில் இருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது
-
Jun 16, 2025 09:11 IST
தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது
-
Jun 16, 2025 09:11 IST
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைவு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 6,019 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
Jun 16, 2025 09:08 IST
நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அப்பர் பவானி - 16.8 செ.மீ, பார்சன்ஸ்வேலி - 13.2 செ.மீ, பந்தலூர் - 13 செ.மீ, சேரங்கோடு - 11.8 செ.மீ, போர்த்தி மந்து - 9.4 செ.மீ, எமரால்டு - 5.7 செ.மீ, தேவாலா - 5.2 செ.மீ மழைப் பதிவு ஆகியுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.