மனநலம் குன்றியவர்கள் தான் கொலையாளிகளாக மாறுகின்றனர்: முன்னாள் டி.ஜி.பி.ரவி பேட்டி

காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் தான் என்று முன்னாள் டி.ஜி.பி.ரவி கூறியுள்ளார்.

காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் தான் என்று முன்னாள் டி.ஜி.பி.ரவி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கும் தான் என்று முன்னாள் டி.ஜி.பி.ரவி கூறியுள்ளார்.         

Advertisment

பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில்  மாரத்தான் போட்டி நடைபெற்றது.

3, 5, 10 கிலோ மீட்டர் கிலோமீட்டர் என மூன்று பிரிவாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியினை முன்னாள் டி.ஜி.பி.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர்.

Coimbatore

Advertisment
Advertisements

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டி.ஜி.பி.ரவி, ‘மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இந்த மாரத்தான் நடைபெற்றது.

போதை மருந்துக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையின் நடவடிக்கையால் தமிழகத்தை பொறுத்தவரை போதை பழக்கம் இப்போது குறைந்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்கள், திரைப்படங்களில் வன்முறையை நல்ல வியமாக சித்தரிக்கப்படுவதால் ஒரு சில இளைஞர்கள் பாதிக்கப்படலாம். மனநலம் குன்றியவர்கள் தான் கொலையாளிகளாக மாறுகிறார்கள்.

சமூக நலத்தை சரி செய்வதற்கு தான் போலீஸ் என்கவுண்டரை பயன்படுத்துகிறார்கள். காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களை பாதுகாப்பதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தான்.

அரசியல் கொலை நடத்தப்படும் போது அது பெரிது படுத்தப்படும். இது போன்ற நடவடிக்கை எடுக்கும்போது அது குறைந்த மாதிரி தெரியும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் போது பெண் தாதாக்கள் என்பது வரலாற்றிலிருந்து இருக்கிறது.  இது புது விஷயம் அல்ல காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுடைய மனநலம், உடல் நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நன்றாக சேவை செய்ய முடியும் என இவ்வாறு தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: