Advertisment

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த பணம்: 28 ஆண்டுகளுக்கு பின்பு புகார்தாரரிடம் ஒப்படைப்பு

கோவை, வடவள்ளி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு கதிர்மதியோன் என்பவர் மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தார்

author-image
WebDesk
New Update
coimbatore man 400

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், 28 ஆண்டுகளுக்கு பின் புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கோவை, வடவள்ளி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு கதிர்மதியோன் என்பவர் மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தார். அந்த நேரம் அவரிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.

அப்போது கதிர்மதியோன் கொடுத்த ரூ.400 தடயங்களாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது.

அவை 28 ஆண்டுகளுக்கு பின் புகார்தாரருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேசிய கதிர்மதியோன், இது எனக்கு தண்டனை போல உள்ளது.  பாதிக்கப்பட்ட நபர்களிடம் பெறப்படும் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment