கோவை தனியார் கல்லூரியில் நாய் கொடூர கொலை.. இருவர் மீது வழக்குப் பதிவு

கோவை சரவணம்பட்டி துடியலூர் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.

கோவை சரவணம்பட்டி துடியலூர் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore

கோவையில் நாய் அடித்துக் கொலை

கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கோவை சரவணம்பட்டி துடியலூர் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் தெரு நாய் ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த கல்லூரி ஊழியர்கள்  விரட்டியுள்ளனர். அப்போது ஊழியர்களிடமிருந்து தப்ப முயன்ற நாய் புதர் ஒன்றில் சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் நாயை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், கயிறு மூலம் இழுத்துச் சென்று, நாயின் உடலை வெளியில் எரிந்தனர்.

Advertisment
Advertisements

இதை வீடியோ எடுத்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அது வைரலாகி வருகின்றன.

publive-image
இருவர் மீது வழக்குப்பதிவு

வீடியோவில் ஊழியர்கள் புதருக்குள் சிக்கிய தெரு நாய்யை, கட்டையால் தாக்குவதும், வலியால் நாய் கத்துவதும் பதிவாகி இருக்கிறது.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா என்பவர், வீடியோ காட்சிகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: