Advertisment

உக்கடத்தில் புதைவட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவு

தற்போது புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore news

கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

Advertisment

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றன. இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக செல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலை உருவானது.

இதை அடுத்து உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின் நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவிட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு, அதில் உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவிட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.

publive-image

விட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன

அந்த புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பெரிய மீன் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

தற்போது புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது. இதுகுறித்து கோவை மாநகர் மையக்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

உக்கட மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவிட மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது

மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடைபெற உள்ளது இதையொட்டி சில நேரங்களில் உக்கடம் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment