நாடு முழுவதும் 2024 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
![Traffic1.jpeg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/9Ggu01h6WOziaw2lJahu.jpeg)
புத்தாண்டை முன்னிட்டு கோவை வாலாங்குளத்தில் லேசர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவற்றை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாலாங்குளத்தில் திரண்டனர்.
![Traffic2.jpeg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/YniIOlOv2ntMUY2Fiju1.jpeg)
இந்த நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீடு திரும்பியதால் வாலாங்குளத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவு 2 மணி வரை இந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனிடையே அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும், அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை அழைத்து வர வெளியேறிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின.
நோயாளிகளுடன் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்களே வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.
![Traffic3.jpeg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/vZbvE1fudiFOf2qLooUn.jpeg)
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“