கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
கோவையில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த நவம்பர் மாதம் கார் கெஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலில் தமிழக போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு துறை விசாரித்து வருகிறது.
இதனிடையே இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான இதவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ்,பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு துணை (NIA) அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐந்து பேரையும் என்.ஐ.ஏ (NIA ) அதிகாரிகள் உக்கடம் கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளில் வைத்து அவர்களில் சில கேள்விகள் எழுப்பி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவர்களை மீண்டும் அழைத்து சென்றனர்.
காலையிலேயே என்.ஐ.ஏ (NIA )அதிகாரிகள் அவர்களை அழைத்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“