/indian-express-tamil/media/media_files/dQ8kVDZYnQr36lNTR0eW.jpg)
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கோவை வருவதாக வந்த தகவலை அடுத்து செய்தியாளர்கள் கோவை விமான நிலையத்தில் அண்ணாமலையின் பேட்டிக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றார். இதன்பின் தொடர்ந்து சென்ற செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இனி என் வாழ்வில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். செய்தியாளர் சந்திப்பு எல்லாம் கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும்.
நான் மட்டுமல்ல பா.ஜ.க-வில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும். செய்தியாளர் சந்திப்பு குறித்த மாவட்ட தலைவர் முறையாக தகவல் தருவார்" என்று அவர் கூறினார்.
சிறிது நேரத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற அழைப்பு விடுத்துள்ளது குறிப்படதக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.